news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Sunday, June 2, 2013

பஞ்சவர்ணம் பதிப்பகம்


பஞ்சவர்ணம் பதிப்பகம்

பஞ்சவர்ணம் பதிப்பகம்
TIN : 33604481695
பதிப்பக ISBN – 978-81-923771CST : 391691
பஞ்சவர்ணம் பதிப்பகம், பஞ்சவர்ணம் எழுதும் நூல்களையும், தாவரத் தகவல்மையம் தொகுக்கும் நூல்களையும் வெளியிடும் பணியில் 2012-ஈடுபட்டுள்ளது.

பதிப்பகத்தின் முதல் நூலும், ஆசிரியர்ரின் முதல் நூலுமான “பிரபஞ்சமும் தாவரங்களும்” புத்தகம் சிறந்த நூலகவும், சிறந்த ஆசிரியராகவும் தேர்வு செய்து பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

பிரபஞ்சமும் தாவரங்களும்

புத்தக ISBN – 978-81-923771-0-0

“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்னும் இந்நூலுக்கு 1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலுக்கான பரிசும், நூலாசிரியர் பஞ்சவர்ணத்திற்கு சிறந்த நூலாசிரியருக்கான விருதும் சான்றும், அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் வெளியிட என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்.

“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள கோயில் மற்றும் ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக வடிவமைக்கப் பட்டுள்ளது.


கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்
புத்தக ISBN – 978-81-923771-1-7
8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்
திரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

சங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.

அடுத்ததாக வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரின் அருட்பாவில் உள்ளத் தாவரங்களை தொகுத்து “வள்ளலாரின் அருட்பா தாவரங்கள்” என்ற நூலும்

தாவரங்களை ஓர் உயிர் பாகுபாட்டில் கொண்டுவந்து ஓரின பகுப்பிலுள்ள தாவரங்களுக்கு விளக்கம் அளித்து, தாவரங்களின் இளமைகால பெயர்களை இரண்டாம் நூற்றாண்டிலேயே பதிவுச் செய்து உலகிற்கு முன்னோடியாக இருந்த தொல்காப்பியரின் தொல்காப்பியத்தில் உள்ள தாவரங்களை தொகுத்து “தொல்காப்பியரின் தொல்காப்பிய தாவரங்கள்” என்ற நூலும்,

நல் உயிர்களுக்கு யோகம், வைத்தியம், வாசி, சன்மாரக்கம், இறைவழிப்பாடு, இறைவழிப்பாட்டு சீர்திருத்தம், இவைகளை மந்திர மொழியாக உலகிற்கு அளித்து முதல் முதலாக திருமந்திரத்தை அளித்தவரும், இறைவனுக்கு அளிக்கும் தாவரங்களின் இலையை மிகசிறந்த தானமாக கூறிய திருமூலரின் திருமந்திரத்திலுள்ள தாவரங்களை தொகுத்து “திருமூலரின் திருமந்திர தாவரங்கள்” என்ற நூல்கள் அச்சு கோர்ப்பில்  உள்ளது.

தொடர்ந்து தமிழ் ஓலைச்சுவடிகள், சங்க இலக்கியம், பதினெண்கீழ் கணக்கு நூலகள், பக்தி இலக்கியம், மருத்துவ இலக்கியம், வாய்மொழி இலக்கியம் இவைகளில் உள்ளத் தாவரங்களை வெளியிடவுள்ளோம்.

No comments:

Post a Comment