news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

நிகழ்வுகள்


நூல் வெளியீட்டுகள்


பிரபஞ்சமும் தாவரங்களும்-1-7-20011


புத்தக ISBN – 978-81-923771-1-7

பிரபஞ்சமும் தாவரங்களும்


பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள்நட்சத்திரங்கள்ராசிகள்திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ்ஆங்கில தாவர இயல் பெயர்கள்மருத்துவத் தன்மைஎளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன்வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள்விடுகதைகள்மருத்துவத் தொகைப் பெயர்கள்தலமரமாக உள்ள கோயில் மற்றும் ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

பிரபஞ்சம் நூல் வெளியீடு

பிரபஞ்சமும் தாவரங்களும்



பிரபஞ்சமும் தாவரங்களும்’ 1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் வெளியிட என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்

சிறந்த நூல்

பஞ்சவர்ணம்


1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலுக்கான பரிசுசென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க திரு இரா. பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார்.என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள்என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்

சிறந்த நூல் ஆசிரியர்

பஞ்சவர்ணம்



1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலை தொகுத்து வழங்கிய திரு இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்கு சிறந்த நூல் ஆசிரியருக்காணதொகையை,சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்கஎன்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள்என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.


 புத்தக ISBN – 978-81-923771-1-7

குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்


8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும்இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமானநீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்

திரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர்ச.கு. ஆச்சார்யாபேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.



சங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல்சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.



கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்


08.07.2012 அன்று நடைபெற்ற 15-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில்
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிஅரசரும்இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான திரு அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு பி. சுரேந்திரமோகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் என்.எல்.சி மனிதவள இயக்குனர் ச.கு. ஆச்சார்யா பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மற்றும் மணிவாசகம் பதிப்பக உரிமையாளர்

சிறந்த நூல்

பஞ்சவர்ணம்




தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் நூல் வெளியீடு
நாள் :                10-07-2013
இடம் : பதினாறாவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிலையம்



தொல்காப்பியத் தாவரங்ள்

புத்தக ISBN – 978-81-923771-3-1




"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா" 



"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" என்ற இந்த நூலில்

தொல்காப்பியர் நிலத்திணைகளின் பெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :

(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)

போர் முறை, போர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு அடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :

(உழிஞை, உன்னம், கரந்தை, காஞ்சி, தும்பை, நொச்சி, பாசி, போந்தை, வஞ்சி, வாகை, வெட்சி)

மருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :

(கடு, வேம்பு)


சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :

(அரை, ஆண்மரம், ஆல், ஆர், ஆவாரை, இல்லம், உதிமரம், எகின், ஒடுமரம், கடு, குமிழ், சார், சேமரம், ஞெமை, தளா, நமை, நெல், பனை, பிடா, பீர், புளி, பூல், மா, யா, விசை, வெதிர், வேல்)

வழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் :

(காந்தள்)

கூத்து, ஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :

(வள்ளி, வள்ளை)

மரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து

தாவரங்களின் ஆங்கிலப்பெயர், வகைப்பாட்டியல், தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள், தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியத் தாவரங்கள் நூல் வெளியீட்டு

தொல்காப்பியத் தாவரங்ள்

தொல்காப்பியத் தாவரங்கள்

பஞ்சவர்ணம்




No comments:

Post a Comment